எண்ணற்ற நன்மைகள் தரும் எண்ணெய்க் குளியல்!
எண்ணெய்க் குளியல்: எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நாம் பழங்காலத்தில் இருந்தே கடைப்பிடித்து வரக்கூடிய ஒரு பழக்கம் . `பதார்த்த குண சிந்தாமணி’ என்ற மருத்துவ நூலில் , ` நோயணுகா விதி ’ என்று ஒரு பாடல் இருக்கிறது. அதில், நம்மை நோய் தாக்காமல் இருக்கச் செய்யவேண்டிய காரியங்கள் குறித்துப் பல விஷயங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன. அவற்றில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும் ஒரு பகுதி. அந்த அளவுக்கு தமிழர்கள், மருத்துவத்தில் எண்ணெய் தேய்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் . எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் கிடைக்கும் பலன்கள் * இரைப்பு,இளைப்பு நோய்கள் நீங்கும். * முகத்தில் உண்டாகும் நோய்கள் நீங்கும். * மூக்கடைப்பு நீங்கும். * அதிவியர்வை நீங்கும். * தெளிவு உண்டாகும் * தலை,முழங்கால்கள் உறுதியடையும் * ஐம்புலன்களுக்கும் பலம் * தலைவலி ,பல்வலி நீங்கும் * உடல் பலமாகும் * தோல் வறட்சி நீங்கி தோல் பளபளப்பாகும் * முடி கறுத்து வளரும் * சோம்பல் நீங்கும் * சுவையின்மை நீங்கும் * நல்ல குரல் வளம் உண்டாகும் * மிகவும் முக்கியமாக உடற்சூட்டை சமநிலைக்கு கொண்டு வந்து, நோயெதிர்ப்புத் திறனை அதிகரித்து உடலை நோய்